மஞ்சளாறு அணையில் தென்னை நார் கயிறு வலை போர்வை சோதனை முயற்சி குறித்து கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். அருகில் அலுவலர்கள் உள்ளனர்.
மஞ்சளாறு அணையில் மண் அரிப்பை தடுக்க தென்னை நாரில் கயிறு வலைகள்
- தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலைகளை கொண்டு மூடப்பட்டதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று பார்வையிட்டார்.
- கரையோர மண்ணரிப்பு கட்டுப்பாடு ஆகியவற்றில் பயன்படுத்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சோதனை முயற்சியாக இந்தியாவி லேயே முதன் முறையாக நமது சூழலுக்கு உகந்த தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலைகளை கொண்டு மூடப்பட்டதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வை யிட்டார்.
மஞ்சளாறு அணை கரை பகுதியில் மண்ணரிப்பை தடுப்பதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக சோதனை முயற்சியாக, கரை பகுதி முழுவதும் தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலை களை கொண்டு மூடப்ப ட்டது. இத்திட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு பின்னரும் எந்தவித மண்ணரிப்புமின்றி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது.
வெற்றிகரமாக செய ல்பட்ட இத்திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்களில் மண்ணரிப்பை தடுப்பதற்காக சோதனை முறையில் பயன்படுத்து வதற்காக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவல ர்களுக்கும், செயற் பொறி யாளர்களுக்கும், பொறி யாளர்களுக்கும் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு விரிவாக பயிற்சி அளிக்க ப்பட்டது.
தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலை போடப்பட்டதனால் ஏற்பட்ட நன்மைகள் குறித்தும், இறுக்கமான கயிறு வலை கட்டமைப்பு மண்ணை உறுதிப்படுத்து கிறது மற்றும் மண்ணரிப்பு கட்டுப்பாட்டுக்கு பயனுள்ள தாக உள்ளது.இதனை சாலை கட்டுமானம் மற்றும் கரையோர மண்ணரிப்பு கட்டுப்பாடு ஆகியவற்றில் பயன்படுத்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .
தென்னை நாரினால் செய்யப்பட்ட இந்த கயிறு வலைகள் 400 ஜி.எஸ்.எம்., 700 ஜி.எஸ்.எம்., 900 ஜி.எஸ்.எம்., என 3 வகைகளில் கிடைக்கிறது.
இப்பயிற்சியைத் தொடர்ந்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு குளத்தை தேர்வு செய்து சோதனை முயற்சியாக இந்த கயிறு வலைகளை பயன்ப டுத்தி அதன் செயல்பாடு களை ஆராய வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவு ரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மதுமதி, செயற்பொறியாளர் முருகன், உதவி பொறி யாளர்கள் ரவிச்சந்திரன், ராஜேஷ்வரன், ஜோதி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.