உள்ளூர் செய்திகள்

லாட்ஜில் துணி வியாபாரி தற்கொலை

Published On 2023-06-19 09:40 GMT   |   Update On 2023-06-19 09:40 GMT
  • ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (46). துணி வியாபாரி. கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஈரோடு வந்து நேரு வீதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்ப டவில்லை. அறையை தூய்மைபடுத்தும் தொழிலா ளர்கள் நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்தனர்.

பின்னர் ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

டவுன் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

சுந்தர்ராஜன் எந்த காரணத்துக்காக தற்கொலை செய்து கொ ண்டார் என தெரியவில்லை. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News