உள்ளூர் செய்திகள்

மூடப்பட்ட ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை.

பெரும்பாறையில் முறைகேடாக செயல்பட்ட ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை மூடல்

Published On 2023-04-29 13:12 IST   |   Update On 2023-04-29 13:12:00 IST
  • குடியிருப்புக்கு அருகே தொழிற்சாலை இருப்பதால், அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் முதியவர்கள், சிறுவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
  • இ.பெரிய சாமியை நேரில் சந்தித்து முறைகேடாக செயல்படும் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி பெரும்பாறை ஆர்.ஆர். நகரில் தனியாருக்கு சொந்தமான ஏலக்காய் பதப்படுத்தும் தொழி ற்சாலை உள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொழிற் சாலையால் ஆர்.ஆர்.நகரில் வசிக்கும் மலைகிராம மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர்.

இதுதவிர ஏலக்காய் பதப்படுத்தும் தொழி ற்சாலையில் 18 மணி நேரம் ஓடக்கூடிய ஜென ரேட்டர் இரைச்சலால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பலவித நோய்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும் குடியிருப்புக்கு அருகே தொழிற்சாலை இருப்பதால், அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் முதிய வர்கள், சிறுவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதுதவிர தொழி ற்சாலையிலிருந்து வெளி யேறும் கழிவுநீரால் விலங்குகள் மற்றும் பறவைகளும் பாதிக்கப்ப ட்டன. எனவே கடந்த 2 வருடமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத தால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த பொது மக்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரிய சாமியை நேரில் சந்தித்து முறைகேடாக செயல்படும் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து அமை ச்சர் இ.பெரியசாமி சம்மந்த ப்பட்ட துறை அதிகாரி களிடம் பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார். உடனடி யாக ஏலக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததோடு 3 வருடங்களாக முறைகேடாக தொழி ற்சாலை செயல்படுத்தி வருவது குறித்தும் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரி வித்துள்ளனர்.

Tags:    

Similar News