உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் பேரூராட்சியில் தூய்மை பணி

Published On 2023-10-02 14:17 IST   |   Update On 2023-10-02 14:17:00 IST
  • முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
  • வாறுகாலில் உள்ள சாக்கடைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு ஆலங்குளம் தாலுகா அலுவலக வளாகம், அதனை சுற்றியுள்ள மாறுகால் போன்ற பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் வாறுகாலில் உள்ள சாக்கடைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் ராஜசேகரன், வரி வசூலர் திருமலை வடிவம்மாள், 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News