உள்ளூர் செய்திகள்
ஆவல்நத்தத்தில் பா.ஜனதா சார்பில் தூய்மை பணி நிகழ்ச்சி
- ஆவல் நத்தத்தில் தூய்மை பணி நிகழ்ச்சி நடைபெற்றது.
- பா.ஜ.கவினர் ஈடுபட்டனர்-
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் நிகழ்ச்சி ஆவல்நத்தம் பசவேஸ்வர கோவில் அருகில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா பொதுச் செயலாளர் வி.எம்.அன்பரசன் தலைமை தாங்கி, தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் ஸ்ரீராமுலு, பொதுச் செயலாளர் பிரசாந்த், சந்திரன், முருகன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர நரேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கோவிந்தராஜ், பிரசார பிரிவு நிர்வாகி சந்திரன், மண்டல நிர்வாகி கள் சீனிவாச அய்யர், மதன், முருகன், ஸ்ரீகாந்த், வேடியப்பன், கிருஷ்ணன், லிங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.