உள்ளூர் செய்திகள்
காந்தி ஜெயந்தியையொட்டி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் தூய்ைம விழிப்புணர்வு
- சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையான பாரதம் சேவா நிகழ்ச்சி நடைபெற்றது.
- அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
சின்னமனூர்:
சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீமாதவ சேவா மையம் மற்றும் மலை ஆர்மி கோச்சிங் சென்டர், பாய்ஸ்,கோர்ஸ் கிளப் இணைந்து தூய்மையான பாரதம் சேவா நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
பின்னர் தலைமை டாக்டர் சிவக்குமார், அரசு டாக்டர் நீதிமன்னன் தலைமையில் மலை கோச்சிங் சென்டர் கொடியரசன், ஸ்ரீமாதவ சேவா மைய பொறுப்பாளர் , தூய்மை பாரதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஸ்ரீமாதவ சேவா மையத்தின் மாவட்ட, நகர மற்றும் இந்துமுன்னணி, பா.ஜ.க. பொறுப்பாளர்கள் மற்றும் 100-க்கும்மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.