உள்ளூர் செய்திகள்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தூய்மைப்பணி

Published On 2022-06-05 09:59 GMT   |   Update On 2022-06-05 09:59 GMT
  • திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

திருப்பூர்:

திருப்பூரில் தூய்மைப்பணி இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளருமான முத்துக்கண்ணன் துவக்கி வைத்தார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் சிஐடியு. மாவட்ட தலைவருமான கே.உன்னிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர குழுச் செயலாளர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் சுந்தரம், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி. பாலன், மாநகர குழு உறுப்பினர் பொம்முதுரை உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News