உள்ளூர் செய்திகள்

அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்.


செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மை பணி

Published On 2022-11-22 09:18 GMT   |   Update On 2022-11-22 09:18 GMT
  • எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்தனர்.
  • மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணா தலைமையில், எஸ்.எஸ்.எம்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியினை மேற் கொண்டனர்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முருகன் பணியினை தொடங்கி வைத்தார். மருத்துவமனை ஊழியர்கள் பலவேசம் மூக்கன், செவிலியர்கள் கண்காணிப்பாளர் மலர்விழி, செவிலியர்கள் ராணி, அப்பாஸ் மீரான் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதாரம் பற்றிய அறிவுரைகளை வழங்கினர்.

Tags:    

Similar News