உள்ளூர் செய்திகள்
குளம் சுத்தம் செய்யப்பட்டது.
வேதாரண்யத்தில் சுத்தம் செய்யப்பட்ட தேரடி குளம்
- மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
- ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகரம் கீழவீதியில் அமைந்துள்ளது தேரடி குளம். இந்த குளத்தை அப்பகுதி மக்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர். சமீப காலமாக ஆகாய தாமரை, செடி கொடிகள் படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் குளம் காணப்பட்டது.
இது குறித்து 13-வது வார்டு நகா்மன்ற உறுப்பினர் மயில்வாகனன் கோரிக்கையை ஏற்று வேதாரண்யம் நகராட்சி தலைவா் புகழேந்தி, ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின் பேரில் ஆகாயதாமரை, செடி, கொடிகள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
ஆட்களோடு வார்டு கவுன்சிலர் மயில்வாகணன் இறங்கி வேலை செய்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.