உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே இரு தரப்பினருக்குள் மோதல்; 8 பேர் மீது வழக்கு

Published On 2023-05-23 07:31 GMT   |   Update On 2023-05-23 07:31 GMT
  • சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.
  • வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

கடலூர்:

கடலூர் அடுத்த எம். புதூரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி வைத்தீஸ்வரி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரங்கதுரை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது வைத்தீஸ்வரி தரப்பினருக்கும், ரங்கதுரை தரப்பினருக்கும் திடீரென்று மோதல் ஏற்பட்டது. மேலும் வைத்தீஸ்வரியை மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் வைத்தீஸ்வரி கூரை வீட்டை தீ வைத்து கொளுத்தியதால் எரிந்து சேதமடைந்து.

மோதலில் ரங்கதுரை தரப்பில் சபிதா என்பவரு க்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வைத்தீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ரங்கதுரை மற்றும் 5 பேர் மீதும், சபிதா கொடுத்த புகாரின் பேரில் குமரேசன் உட்பட 3 பேர் என 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News