உள்ளூர் செய்திகள்

மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ரிஷிவந்தியத்தில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-06-19 06:43 GMT   |   Update On 2023-06-19 06:43 GMT
  • கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.
  • ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி, ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் தியாக துருகம் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள   குடியி ருப்புகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். விவசாயிகள், தங்களது பயிருக்கு முறை யாக தண்ணீர் பாய்ச்ச முடி யாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி, ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் நந்த கோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மின்தடை குறித்து மின்வாரியத்தில் பேசி நடவடிக்கை எடுப்ப தாக போலீசார், உறுதி யளித்தனர். இதையடுத்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News