உள்ளூர் செய்திகள்

நேரு படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.


வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

Published On 2022-11-15 14:38 IST   |   Update On 2022-11-15 14:38:00 IST
  • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
  • நேருவின் படத்திற்கு பள்ளியின் தாளாளர் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

நேருவின் திருவுருவப் படத்திற்கு பள்ளியின் தாளாளர் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவர்கள் நேரு பாடல் பாடினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா மற்றும் கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News