உள்ளூர் செய்திகள்
குழந்தைகள் நல பாதுகாப்பு குழு கூட்டம்
- கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர், அங்கன் வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆலத்தம்பாடி ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர், அங்கன் வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.