உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் குழந்தை திருமணம்: 3 பேர்மீது வழக்குபதிவு

Published On 2022-11-13 08:01 GMT   |   Update On 2022-11-13 08:01 GMT
  • 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.
  • மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது25), இவருக்கும் புதுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 28-ந் தேதி காடாம்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் பாலு கருணாநிதி, ராஜ்மோகன் ஆகியோர் மீது குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சமூக நல அலுவலர் தனபாக்கியம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் 3பேர் மீது வழக்கு பதிந்து சிறுமியை கடலூரில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News