உள்ளூர் செய்திகள்
பலியான குழந்தை சிவஸ்ரீ.
தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி
- நேற்று சிவஸ்ரீ விளையாடி கொண்டிருந்தார்.
- எதிர்ப்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் அந்த குழந்தை தவறி விழுந்து இறந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சோலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பு. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு ஒன்றரை வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளன.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையின் பெரியப்பா சண்முகம் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை கவனித்து வந்தனர். நேற்று சிவஸ்ரீ விளையாடி கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.