உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழக தனி அலுவலர் மற்றும் தொடர்பு அலுவலர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் உண்ணாவிரதம்

Published On 2022-11-23 07:50 GMT   |   Update On 2022-11-23 07:50 GMT
  • நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவலர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர்.
  • பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

கடலூர்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னதாக அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு சாலை மறியல் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தற்போது தனியார் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பதவி இறக்கம் உள்ளிட்ட5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பூமா கோவில் அருகே 75 பெண்கள் உள்பட 300 தனியார் அலுவலர்கள் 1 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி போலீசார் உத்தரவின் பேரில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக உள்ளது. 

Tags:    

Similar News