உள்ளூர் செய்திகள்

கடையில் செல்போன் திருடிய வாலிபர் கைது

Published On 2023-04-11 15:10 IST   |   Update On 2023-04-11 15:10:00 IST
  • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மொபைலை திருடி சென்று உள்ளார்.
  • ஓசூர் டவுன் போலீசார் மாருதியை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்தவர் வரதம்மன் (வயது45). இவர் சொந்தமாக மொபைல் கடையை நடத்தி வந்தார்.

இவரது கடையில் வேலை பார்த்து வந்த ஓசூர் தாசரப்பேட்டை சேர்ந்த மாருதி (24) என்பவர் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மொபைலை திருடி சென்று உள்ளார். இவர் வேலைக்கு சேர்ந்து சுமார் 45 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது.

இது குறித்து வரதம்மன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் மாருதியை கைது செய்தனர்.

Tags:    

Similar News