உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு

Published On 2023-03-07 15:47 IST   |   Update On 2023-03-07 15:47:00 IST
  • அந்த வழியாக வந்த ஒருவர் வெங்கடேஸ்வரனை தள்ளி விட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்று விட்டார்.
  • விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ராஜேஸ் என்பது ெதரியவந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது24). இவர் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் வெங்கடேஸ்வரனை தள்ளி விட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்று விட்டார்.

இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த ராஜேஸ் என்பது ெதரியவந்தது. இதனால் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News