உள்ளூர் செய்திகள்

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க முகாம்

Published On 2023-08-20 09:25 GMT   |   Update On 2023-08-20 09:25 GMT
  • கீழாளவந்தசேரி கிராமத்தில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க முகாம் நடந்தது.
  • கால்நடை டாக்டர் பவித்ரா, கால்நடை ஆய்வாளர் ஜி.மாலதி மற்றும் பலர் முகாமை நடத்தினர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரம் கீழாளவந்தசேரி கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் கால்நடை துறை இணைந்து பெரியம்மை தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் ரூபாபாரதி மோகன் தலைமை தாங்கினார். கால்நடை டாக்டர் பவித்ரா, கால்நடை ஆய்வாளர் ஜி.மாலதி மற்றும் கால்நடை உதவியாளர் என்.மோகன்,

உதவி தோட்டக்கலை அலுவலர் வி.சங்கரி, உதவி தொழில்நுட்ப மேலாளர் தா.அருட்செல்வி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.வைரமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News