கோப்பு படம்.
வரதட்சணை புகார் கொடுத்ததால் ஆத்திரம் முதியவரை தாக்கிய பெண் மீது வழக்கு
- வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஆண்டி பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- இந்த நிலையில்பொது இடத்தில் வைத்து புகார் கொடுத்தவரை தாக்கி காயப்படுத்தியதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலுத்தாய் மீது புகார் அளித்தார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது53). இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த வேலுத்தாய் என்பவரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில்பிரச்சினை ஏற்பட்டது. மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஆண்டி பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். மேலும் வழக்கு தொடர்ந்ததால் அவர் மீது வேலுத்தாய் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில்பொது இடத்தில் வைத்து பாண்டியராஜனை தாக்கி காயப்படுத்தியதாக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலுத்தாய் மீது புகார் அளித்தார்.
இது குறித்து விசாரிக்க எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காயம் அடைந்த பாண்டியராஜன் ஆண்டிப ட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.