உள்ளூர் செய்திகள்

கடலூரில் திருநங்கையாக இருந்த வாலிபர் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் தாய்-மகன் மீது வழக்கு

Published On 2022-09-08 14:45 IST   |   Update On 2022-09-08 14:45:00 IST
  • ஹரி கிருஷ்ணன் திருமணத்துக்கு பிறகு ஷோபனா தேவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
  • ஹரிகிருஷ்ணன் ஷோபனா தேவியை, தாக்கி மானபங்கம் படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கடலூர்: 

கடலூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் சோபனா தேவி (வயது 30). இவருக்கும் சீர்காழி தாலுக்கா செம்மங்குடி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது 35). இவர்களுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருவந்திபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ஹரி கிருஷ்ணன் திருமணத்துக்கு பிறகு ஷோபனா தேவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. மேலும் ஷோபனா தேவி, தனது கணவரான ஹரி கிருஷ்ணனை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அழைத்து உள்ளார். ஆனால் அதனை ஹரி கிருஷ்ணன் மறுத்து வந்துள்ளார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று ஹரிகிருஷ்ணன் ஷோபனா தேவியை, தாக்கி மான பங்கம் படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஹரி கிருஷ்ணன் திருநங்கையாக இருந்து வரும் நிலையில் என்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக சோபனா தேவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் கணவர் ஹரி கிருஷ்ணன், அவரது தாயார் புஷ்பா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் திருநங்கையாக இருந்து வந்த நபர் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News