உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

Published On 2022-09-27 16:09 IST   |   Update On 2022-09-27 16:09:00 IST
  • இவர்களுக்குள் வழித்தட பிரச்சினை கடந்த 6 மாதங்களாக இருந்து வருகிறது.
  • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி தாலுகா காவேரிப்பட்டணம் அருகே உள்ள நெடுக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 48). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (62). இவர்கள் அருகருகில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்குள் வழித்தட பிரச்சினை கடந்த 6 மாதங்களாக இருந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி அந்த வழித்தட பாதையில் மகேஸ்வரன் சென்றார். அப்போது அங்கு வந்த வேடியப்பன் இது குறித்து கேட்டார். அந்த நேரம் ஏற்பட்ட பிரச்சினையில் மகேஸ்வரனை வேடியப்பன் தரப்பினர் கல்லால் தாக்கினார்கள். மேலும் கத்தியால் குத்தினார்கள். இதில் காயம் அடைந்த மகேஸ்வரன் சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வேடியப்பன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News