உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

செம்பட்டி அருகே பைக் மீது கார்மோதி ஒருவர் பலி

Published On 2023-04-15 14:06 IST   |   Update On 2023-04-15 14:06:00 IST
  • திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி நோக்கி எதிரே வந்த, கார்-பைக் மீது மோதி விபத்துக்குள்ளனாது.
  • பைக்கை ஓட்டிச் சென்றவர் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சமத்துவபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (39), இவரது நண்பர் எஸ்.கோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த் (35). இவர்கள் இருவரும் செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் ரோட்டில் உள்ள சமத்துவபுரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

இரவு புதுகோடாங்கிபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து செம்பட்டி நோக்கி எதிரே வந்த, அடையாளம் தெரியாத கார்-பைக் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற ஆனந்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த ஆனந்தின் உடலை பிரேத பரிசோ தனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத காரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News