உள்ளூர் செய்திகள்

அணைமேடு அருவியை சுற்றி பார்க்க வந்த2 பேரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2023-04-12 09:26 GMT   |   Update On 2023-04-12 09:26 GMT
  • ஹரிஹர சுதன்(19). இவர்கள் சம்பவத்தன்று தாரமங்கலம் அருகிலுள்ள அணைமேடு நீர் வீழ்ச்சியை சுற்றி பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
  • சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்பி வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் எடையபட்டியை சேர்ந்தவர் கணபதி(வயது24), பாப்பம்பாடி சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர சுதன்(19). இவர்கள் சம்பவத்தன்று தாரமங்கலம் அருகிலுள்ள அணைமேடு நீர் வீழ்ச்சியை சுற்றி பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

இருவரும் சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்பி வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தனி தனியாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார்ட் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News