உள்ளூர் செய்திகள்

அவினாசியில் கடன் கேட்டு கொடுக்காததால் தொழில் அதிபர் கொலை

Published On 2024-12-05 10:40 IST   |   Update On 2024-12-05 10:40:00 IST
  • கடன் கேட்டு கொடுக்காததால் கூலிப்படையை ஏவி கொலை.
  • 5 பேர் கைது, 2 கார்கள், வீச்சரிவாள், கத்தி பறிமுதல்.

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ள னர். ஊட்டியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ், திருப்பூரில் வீட்டில் இருந்தபடியே கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 1-ந்தேதி அதிகாலை நடைபயிற்சி சென்ற போது அவினாசி 6 வழிச்சாலையில் வைத்து காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ரமேசை வெட்டிக்கொன்றனர்.

இந்த கொடூர கொலை வழக்கில் முதற்கட்டமாக, திருவாரூர் மாவட்டம் அறித்துவாரமங்கலம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் (35), மன்னார்குடி பகுதியை சேர்ந்த அஜீத் (27), அதே பகுதியை சேர்ந்த சிம்போஸ் (23), சரண் (24) மற்றும் தேனி மாவட்டம் சில்லு வார்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (45) ஆகிய 5 பேரை அவினாசி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய 2 கார்கள், வீச்சரிவாள் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடததிய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.ரமேசுக்கும், இர்பான் என்பவருக்கும் பணம்-கொடுக்கல் வாங்கல் பிரச்சினை மற்றும் சேவூரில் இடப்பிரச்சினை இருந்து வந்தது.

மேலும் இர்பான் ரமேசிடம் பெரிய தொகையை கடன் கேட்டு ள்ளார். அதற்கு பிணையாக பத்திரமோ பொருளோ இல்லாமல் பெரிய தொகை தர முடியாது என ரமேஷ் மறுத்ததோடு இர்பானை தகாத வார்த்தைகளில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், தனது நண்பர் அரவிந்தன் என்பவரிடம் தெரிவித்தார். இதையடுத்து ரமேசுக்கு உயிர் பயத்தை காட்டும் வகையில் அவரை மிரட்ட 2பேரும் முடிவு செய்தனர்.

இதற்காக கூலிப்படையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அஜீத், சிம்போஸ், சரண், மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.

மேலும் ரமேசை கை, கால்களில் மட்டும் வெட்டு மாறு கூறியுள்ளனர். ஆனால் கூலிப்படையினர் 5 பேரும் ரமேசின் தலையில் வெட்டியதால் அவர் உயிரிழந்தார்.

கொலைக்கு திட்டம் வகுத்த முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளான இர்பான், அரவிந்தன் ஆகிய 2பேரை போலீசார் இன்று கைது செய்தனர். கடன் கேட்டு கொடுக்காததால் கூலிப்படையை ஏவி, தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News