உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்தில் பஸ் சோதனை ஓட்டம்

Published On 2023-03-05 14:48 IST   |   Update On 2023-03-05 14:48:00 IST
  • 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.
  • குஞ்சப்பனையில் இருந்து கோழிக்கரை வரை பஸ் இயக்கம் தொடங்க உள்ளது

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை–யொட்டி கோழிக்கரை, செம்மநாரை உள்பட 10க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.

பஸ்

இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து குஞ்சப்பனை வந்து, அங்கிருந்து பஸ் மூலம் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தங்கள் கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பல கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தங்கள் பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று குஞ்சப்பனையில் இருந்து கோழிக்கரை வரை பஸ் இயக்கம் தொடங்க உள்ளது. இதனையொட்டி இன்று குஞ்சப்பனையில் இருந்து செம்மனாரை வரை அரசு பஸ் சோதனை ஓட்டம் நடந்தது.இந்த சோதனை ஓட்டத்தின் போது பஸ்சில் பழங்குடியின கிராம மக்கள், குழந்தைகள் உற்சாகத்துடன் பஸ்சை வரவேற்று அதில் பயணம் ெசய்து புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். விரைவில் இந்த பஸ் பயன்பாட்டுக்கு வரும்.இந்த பஸ்சானது தினமும் காலை, மதியம், இரவு என 3 முறை தொடர் பஸ் இயக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Tags:    

Similar News