உள்ளூர் செய்திகள்

வஜ்ரவேல்

தம்பி மனைவிக்கு மிரட்டல் விடுத்த அண்ணன் சிறையில் அடைப்பு

Published On 2023-04-16 08:17 GMT   |   Update On 2023-04-16 08:17 GMT
  • வஜ்ரவேல் பவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
  • இதில் ஆத்திரம் அடைந்த வஜ்ரவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கொந்தளம் அருகே பொன்மலர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் சிவகுருநாதன் (வயது 40). இவரது மனைவி பவ்யா (36). அதே பகுதியை சேர்ந்த சிவகுருநாதனின் அண்ணன் வஜ்ரவேல் (44).

இவர் சென்னை ஆலந்தூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வஜ்ரவேல் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான பொன்மலர்பா ளையத்திற்கு வந்துள்ளார்.

நேற்று அவரது தம்பி சிவகுருநாதனின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் பவ்யா மட்டும் இருந்துள்ளார். அங்கு வந்த வஜ்ரவேல் பவ்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வஜ்ரவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பவ்யா பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து வஜ்ர வேலை கைது செய்து விசா ரணை நடத்தி பரமத்தி குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News