உள்ளூர் செய்திகள்

லஞ்சப்புகார் - அவினாசி நில அளவையாளர் பணியிட மாற்றம்

Published On 2023-01-21 12:51 IST   |   Update On 2023-01-21 12:51:00 IST
  • பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.
  • சர்வேயர் மோகன்பாபு லஞ்சம் கேட்பதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும்

அவினாசி :

அவினாசி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நில அளவீடு, பெயர் மாற்றம், உள்ளிட்ட பணிகளுக்கு சென்றால் , நில அளவீடு செய்வதற்கு சர்வேயர் மோகன்பாபு லஞ்சம் கேட்பதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அவர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்படி மாவட்ட கலெக்டர் எஸ்.வினித் இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நில அளவையாளர் மோகன்பாபுவை நீலகிரி மாவட்டம் குந்தா வட்டத்திற்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News