உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை

Published On 2023-02-09 15:26 IST   |   Update On 2023-02-09 15:26:00 IST
  • பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
  • இது குறித்து அவர் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

தருமபுரி,

தருமபுரி குமாரசாமிபேட்டை நடேசன்கவுண்டர் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது62). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குமாரசாமி பேட்டை முருகன் கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்து வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இது குறித்து அவர் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News