உள்ளூர் செய்திகள்

ஆலங்குளத்தில் ராணுவ வீரர் வீட்டில் பித்தளை பொருட்கள் திருட்டு

Published On 2023-08-06 09:07 GMT   |   Update On 2023-08-06 09:07 GMT
  • ராணுவவீரரான சுரேஷ் இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
  • பாத்திரங்களை ஆலங்குளத்தில் உள்ள ஒரு பாத்திரக் கடையில் விற்றது விசாரணையில் தெரியவந்தது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது31). ராணுவவீரரான இவர் இரட்டை கொலை வழக்கில் கைதாகி தூத்துக் குடி பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருட்டு

இவரது வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. சம்பவத்தன்று அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த பித்தளை பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சுரேசின் நண்பரான அதே பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் (32) என்பவர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது

கைது

அலெக்சின் சகோதரர் பிரதீப் குமார், அவரது நண்பர்கள் சுரேஷ்குமார், பிரகாஷ், இந்திரஜித் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த பாத்திரங்களை ஆலங் குளத்தில் ஒரு பாத்திரக் கடையில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News