உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை
- பெற்றோர் பள்ளிக்கு அல்லது வேலைக்கு செல்ல சிறுவனை கண்டித்துள்ளனர்.
- இதனால் விரக்தி அடைந்த சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகு பட்டி மலையடிவாரம், ஒத்தபனைமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். லோடுமேன். இவரது மகன் பிரவீன் (வயது18). 10-ம் வகுப்பு படித்த நிலையில் வீட்டில் ஊர் சுற்றி வந்துள்ளார்.
பெற்றோர் பள்ளிக்கு அல்லது வேலைக்கு செல்ல கண்டி த்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பிரவீன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.