உள்ளூர் செய்திகள்

பா.ம.க.நிர்வாகி மோட்டார் சைக்கிள் எரிப்பு

Published On 2023-08-25 08:26 GMT   |   Update On 2023-08-25 08:26 GMT
  • திருச்சி உறையூரில் பரபரப்பு பா.ம.க.நிர்வாகி மோட்டார் சைக்கிள் எரிப்புபோலீசில் புகார்
  • சம்பவ இடத்திற்கு வந்து உறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

 திருச்சி 

திருச்சி உறையூர் பாய்க்கார தெருவை சேர்ந்தவர் கதிர் ராஜா. முன்னாள் பாமக மாவட்ட செயலாளரான இவர் திருச்சி மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக உள்ளார். இவரது வண்டியை வீட்டில் நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர் .அது மட்டுமின்றி அருகில் உள்ள மற்றொருவரின் வாகனமும் எரிக்கப்பட்டது.இதுகுறித்து கதிர் ராஜா உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு வந்து உறையூர் போலீசார்

விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News