உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஒட்டன்சத்திரம் அருகே ரத்ததான முகாம்

Published On 2023-10-01 04:30 GMT   |   Update On 2023-10-01 04:30 GMT
  • இடையகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கோபி கிருஷ்ணா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
  • சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

ஒட்டன்சத்திரம்:

இடையகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கோபி கிருஷ்ணா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் அபிநயா கலந்து கொண்டார்.

ரத்ததான முகாமில் இடையகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும் ரத்ததானம் செய்த நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News