உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

ஆட்டோ கவிழ்ந்து பலியான மாணவர் குடும்பத்துக்கு கூடுதல் நிதி கேட்டு சாலை மறியல்

Published On 2023-10-12 09:24 GMT   |   Update On 2023-10-12 09:24 GMT
  • தமிழ்செல்வன் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
  • அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர்.

கடலூர்:

பண்ருட்டி அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (20)கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர். இவர் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் சொந்த ஊரான பண்ருட்டி உட்கோட்டம் புதுப்பேட்டை போலீஸ் சரகம் மணப்பாக்கம் ஊராட்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது மரியாதை செலுத்த வந்த பெரியார் கலை கல்லூரி மாணவர்கள், உறவினர்கள், கிராமத்தினர், அதே ஊராட்சியை சேர்ந்த சுரேந்தர், மாவட்ட தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி சியாமளா சுரேந்தர், மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அரசு அறிவித்த 2 லட்சம் இழப்பீடு போதாது என்றும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அனைவரையும் திரட்டி கடலூர் - மடப்பட்டு சாலை அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர். பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News