உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா மகளிர் அணியினர்.
தென்காசியில் பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
- தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ஜ.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தமிழகத்தில் தி.மு.க. அரசு கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தென்காசி மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி சார்பில் மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செய லாளர் வளர்மதி முன்னிலை வகித்தார். பொருளாளர் மரகதம், தென்காசி நகர தலைவர் மந்திர மூர்த்தி வரவேற்புரை யாற்றினார். ஆர்ப்பாட்ட த்திற்கு சிறப்பு அழைப்பா ளர்களாக தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமரா ஜா, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.