உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-23 08:46 GMT   |   Update On 2022-07-23 08:46 GMT
  • அதன்படி தஞ்சை ரெயிலடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை வகித்தார்.

தஞ்சாவூர்:

மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி தஞ்சை ரெயிலடியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை வகித்தார்.

ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் குமரேசன், மாவட்டத் தலைவர் பாலா என்கிற பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் இளங்கோவன், வழக்கறிஞர் பிரிவு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News