உள்ளூர் செய்திகள்
பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா பிஜேபி குமார் தலைமையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பாரதிய ஜனதா கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா பிஜேபி குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கே ஆர் வி அறக்கட்டளை வெங்கடேசன் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நந்தன், பொதுச் செயலாளர் பொன் பாஸ்கர், நகர தலைவர் சிவகுமார் நகர பொதுச் செயலாளர் ரமேஷ், ஓ பி சி அணி துணை தலைவர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் வேல் மாரியப்பன், மகளிர் அணி ராஜி, மகேஸ்வரி, தடபெரும்பாக்கம் சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.