பேர்டு ஆப் பாரடைஸ் மலர்.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த 'பேர்டு ஆப் பாரடைஸ்' மலர்
- பிரையண்ட் பூங்காவில் பேர்ட் ஆப் பாரடைஸ் மலர் பூத்துக்குலுங்குகிறது
- இந்த வகை மலர்கள் பறவை போல் காணப்படுவதால் பேர்ட் ஆப் பேரடைஸ் என்று அழைக்கப்படுகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை கவரும் விதமாக பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
குறிப்பாக கோடை விழா மலர் கண்காட்சிக்காக நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலர் செடிகள் நடப்பட்டு. இதில் ஏப்ரல், மே மாதத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கும். தற்போது பிரையண்ட் பூங்காவில் பேர்ட் ஆப் பாரடைஸ் மலர் பூத்துக்குலுங்குகிறது.
இந்த மலர் செடிகள் பூங்காக்கள் மட்டுமின்றி கொடைக்கானல் மலைச்சாலை ஓரங்களில் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. சுற்றுலா செல்லும் பயணிகள் இதனை கண்டு ரசித்து வருகின்றனர்.
மலைப்பகுதியில் காணப்படும் இந்த வகை மலர்கள் பறவை போல் காணப்படுவதால் பேர்ட் ஆப் பேரடைஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை மலர்கள் மலை ஸ்தலங்களில் மட்டுமே பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.