உள்ளூர் செய்திகள்

சிறுமலையில் பல்லுயிர் பூங்கா அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சுற்றுலா பயணிகளை கவர வனத்துறை சார்பில் சிறுமலையில் பல்லுயிர் பூங்கா

Published On 2023-02-26 10:28 IST   |   Update On 2023-02-26 10:28:00 IST
  • சிறுமலை-தென்மலை ரோட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
  • பல்வேறு பொழுதுபோக்கு அம்ச ங்கள், உயர்கோபுரங்கள் என அனைத்தையும் அமைக்கும் பணியில் வனத்துைற தீவிரமாக உள்ளது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலைக்கு வெளிநாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானலில் உள்ள சீதோஷ்ணநிலை இங்கும் நிலவுவதால் பயணிகள் ரசித்து வருகின்றனர்.

ஆனால் இங்கு இயற்கையை ரசிக்க இடங்கள் இருக்கும் அளவிற்கு பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு. இதனால் கார், பைக்குகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் உடனடியாக கீேழ இறங்குகின்றனர். இதைஅறிந்த வனத்துறை தற்போது அங்கு கட்டண த்துடன் அனுமதிக்கப்படும் பல்லுயிர் பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது.

சிறுமலை-தென்மலை ரோட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லுயிர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு உணவருந்த மரத்திலான அறை, செயற்கை நீருற்று, பட்டாம்பூச்சி பூங்கா, பலவண்ணபூச்செடிகள், கே ன்டீன்கள், மூலிகை செடிகள், குழந்தைகள் விளையாட பொழுதுபோக்கு அம்ச ங்கள், உயர்கோபுரங்கள் என அனைத்தையும் அமைக்கும் பணியில் வனத்துைற தீவிரமாக உள்ளது.

இதன் பணி 98 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் பிரபு கூறுகையில், பல்லுயிர் பூங்கா பணிகள் விரைந்து நடந்து வருகிறது. சில மாதங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்ப டுவார்கள். பூங்கா 2 மாதங்களில் திறந்து செயல்பாட்டுக்கு வந்ததும் இவ்விடத்தில் விலங்குகள், பற வைகள் போன்ற வடிவங்களில் செடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெரிய கூண்டுகள் அமைத்து இங்குள்ள பறவைகளை சுற்றுலா பயணிகள் கூண்டுக்குள் சென்று பார்வையிடும் வகையில் திட்டமதிப்பீடும் தயார் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Tags:    

Similar News