உள்ளூர் செய்திகள்

பாலம் அமைக்க பூமி பூஜை

Published On 2023-06-15 15:38 IST   |   Update On 2023-06-15 15:38:00 IST
  • சிறு பாலம் அமைக்க ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சிக்குட்பட்ட வண்ணாந்துறை அணையில் இருந்து பெனுகொண்டாபுரம் ஏரிக்கு செல்லும் கால்வாயின் குறுக்கே செட்டியப்பன் நகர் பகுதிக்கு செல்ல சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் சிறு பாலம் அமைக்க ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் சக்கரவர்த்தி, மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியரே ஜான், ஒன்றிய துணை செயலாளர் இந்தியாஸ் ஷாஜஹான், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சரளா ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் வனஜாமணி, ஒன்றிய மீனவர் அணி செயலாளர் முனுசாமி, பாசறை செயலாளர் பாண்டியன். மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News