உள்ளூர் செய்திகள்

திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை

Published On 2023-07-01 09:24 GMT   |   Update On 2023-07-01 09:24 GMT
  • ரூ.1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது.
  • எண்ணே கொள்புதூர் அரசு உயர்நிலை ப்பள்ளியில் ரூ.18.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கட்டிடத்தை மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பனப் பள்ளி ஒன்றியம் எண்ணே கொள்புதூர் ஊராட்சியில் ரூ.1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து எண்ணே கொள்புதூர் அரசு உயர்நிலை ப்பள்ளியில் ரூ.18.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் கட்டிடத்தை மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து வேப்பனப்பள்ளி ஒன்றியம் எண்ணே கொள்புதூர், சென்றா கவுண்டர் கிராமத்திற்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டுதல், கரிக்கல் நத்தத்தில் ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி அமைத்தல், பெரிய புளியரசி கிராமத்தில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அமைத்தல், பெரிய புளியரசி கிராமத்தில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மதியழகன் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் கோவிந்தன், அன்பரசன், மேற்கு மாவட்ட பிரதிநிதி மாதேஸ்வரன், எண்ணே கொள்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News