உள்ளூர் செய்திகள்

மாரண்டஅள்ளியில் பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை

Published On 2023-03-18 09:23 GMT   |   Update On 2023-03-18 09:23 GMT
  • மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் எம்.ஏ வெங்கடேசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
  • தி.மு.க பிரதிநிதிகள் குழந்தைவேலு, காந்தி, ரமேஷ், மற்றும் ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 6- வது வார்டில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் எம்.ஏ வெங்கடேசன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி மற்றும் கவுன்சிலர்கள் புவனேஸ்வரி மணிகண்டன், கார்த்திக், யதிந்தர், மற்றும் தி.மு.க பிரதிநிதிகள் குழந்தைவேலு, காந்தி, ரமேஷ், மற்றும் ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News