உள்ளூர் செய்திகள்

சாமளாபுரம் பேரூராட்சியில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகளு க்கு பூமி பூஜை

Published On 2023-02-22 05:01 GMT   |   Update On 2023-02-22 05:01 GMT
  • பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
  • வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி 14-வது வார்டில் கருகம்பாளையம் மெயின்ரோடு முதல் சேனாதோட்டம் வரை சுமார் 400மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 13-வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி,14-வது வார்டு கவுன்சிலர் துளசிமணி ஆறுமுகம் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News