உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை.

கோட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

Published On 2022-12-15 09:13 GMT   |   Update On 2022-12-15 09:13 GMT
  • நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.
  • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் -நாகை சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு ரூ.3 கோடியே 69 லட்சத்தில்கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது .

நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கட்டிடம்கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் (பொ)மதியழகன், நகர மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயமுருகையன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, பாஸ்கர்மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News