உள்ளூர் செய்திகள்

நத்தத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நத்தத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணவிகள் பரதநாட்டியம்

Published On 2023-09-19 09:38 IST   |   Update On 2023-09-19 09:38:00 IST
  • நத்தம் கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் சலங்கை அணி விழா எனும் மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது.
  • இதில் சிறுமிகள் முதல் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு நடனம் ஆடினர்.

நத்தம்:

நத்தம் கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் சலங்கை அணி விழா எனும் மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நத்தம் இதயா அகாடமி சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறுமிகள் முதல் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு நடனம் ஆடினர். இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு பரதநாட்டியத்தை கண்டு ரசித்தனர்.

இதே போல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. மேலும் அருகில் உள்ள முருகப் பெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடந்தது. மேலும் காமாட்சி மவுன குருசாமி மடத்தில் பூஜைகள் நடந்தது.

இதில் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போலவே நத்தத்தில் பெரிய விநாயகர்,வெற்றி விநாயகர், லெட்சுமி விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகர் சிலை வைத்து உற்சாகமாக வழிபட்டனர்.

Tags:    

Similar News