உள்ளூர் செய்திகள்

மது அருந்தியதை கண்டித்ததால் விஷம் குடித்த தொழிலாளி சாவு

Published On 2022-11-06 14:14 IST   |   Update On 2022-11-06 14:14:00 IST
  • நேற்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த தனது கணவரை மனைவி கண்டித்துள்ளார்.
  • மனமுடைந்து காணப்பட்ட ரமணா விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள அருப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமணா (வயது40). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் நேற்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த தனது கணவரை மனைவி கண்டித்துள்ளார்.

இதனால் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ரமணா விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ரமணா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News