உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் கரடி நடமாட்டம்

Published On 2023-07-18 14:10 IST   |   Update On 2023-07-18 14:10:00 IST
  • பாட்டிஸ்ட் காலனியில் ஒரு கரடி பகல் நேரத்தில் சாலையில் ஓடும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.
  • கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவேணு,

கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோத்தகிரி, பாட்டிஸ்ட் காலனியில் ஒரு கரடி பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து சாலையில் ஓடும் காட்சி, அங்கு உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இந்த பகுதியில் தொடர்ந்து உலா வரும் கரடி, பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நேரும்முன்பாக, அந்த கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News