உள்ளூர் செய்திகள்

தூய்மை பணிகளுக்காக 20 பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி. அருகில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் உள்ளார்.

சங்கரன்கோவிலில் நகராட்சி தூய்மை பணிகளுக்காக பேட்டரி வாகனங்கள்-ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-07-23 14:02 IST   |   Update On 2023-07-23 14:02:00 IST
  • நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
  • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மைப் பணிகளுக்காக 15-வது நிதி குழு மானியம் மூலம் 20 பேட்டரி வாகனங்கள் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய பேட்டரி வாகனங்களை நகராட்சி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், சிவகிரி சேது சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிசாமி மாரிமுத்து, வக்கீல் சதீஷ், வீரமணி, தாஸ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News