உள்ளூர் செய்திகள்
வடமதுரை அரசு பள்ளியில் கூடைப்பந்து போட்டி
- வடமதுரை அரசு பள்ளியில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.
- போலீசார், பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வடமதுரை:
வடமதுரை போலீஸ் நிலையத்தின் சார்பில் புகையில்லாத உலகம் படைப்போம் விழிப்புணர்வு முகாம் மற்றும் கூடைப்பந்து போட்டி வடமதுரை ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்க்காதேவி தொடங்கி வைத்தார்.
இதில் வடமதுரை தி.மு.க. நகர செயலாளர் கணேசன், இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன், மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட போலீசார், பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.