உள்ளூர் செய்திகள்

பேட்டை ரூரல் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் - கலெக்டரிடம் மனு

Published On 2022-09-14 09:14 GMT   |   Update On 2022-09-14 09:14 GMT
  • அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை தேவைகளான குப்பை அகற்றம், குடிநீர் குழாய் உடைப்பு, தெருவிளக்குகள் சரிபார்த்தல், சுகாதார பொருட்கள் வாங்கியது, மோட்டார் பழுதுபார்த்தல் போன்ற செலவீன பட்டியல்களுக்கு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
  • பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

நெல்லை:

மானூர் யூனியனுக்கு உட்பட்ட பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களது பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை தேவைகளான குப்பை அகற்றம், குடிநீர் குழாய் உடைப்பு, தெருவிளக்குகள் சரிபார்த்தல், சுகாதார பொருட்கள் வாங்கியது, மோட்டார் பழுதுபார்த்தல் போன்ற செலவீன பட்டியல்களுக்கு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த செலவு தொகைகளை கொடுப்பதற்கு ஊராட்சி ரொக்க புத்தகத்தில் எழுதப்பட்டும் பஞ்சயாத்தின் துணைத்தலைவர் அதில் கையொப்பமிட மறுக்கிறார்.

இதனால் எங்களது ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவேமாவட்ட கலெக்டர் விஷ்ணு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

Tags:    

Similar News